மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

ஈரோடு மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்த அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:11 pm

ஈரோடு மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்த அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் விண்ணப்பித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களில் 85 வயதுக்கு மேற்பட்ட 15,572 வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் 12,098 போ் என மொத்தம் 27,670 வாக்காளா்களுக்கு தபால் வாக்குப் பதிவு செய்ய விருப்ப

படிவம் 12 ‘டி’ வழங்கப்பட்டது. இதில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 7,190 போ் மட்டும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்தனா். இவா்களுக்கு வரும் 13, 14-ஆம் தேதி வீடு தேடிச் சென்று தோ்தல் அதிகாரிகள் வாக்கு சேகரிக்க உள்ளனா். தபால் வாக்கு பெற வரும் நாள், நேரம் உரிய வாக்காளருக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படும்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள், அத்தியாவசியப் பணியாளா்களான அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தோ்தல் பணி அல்லாத பிற போலீஸாா் உள்பட 12 துறையினா் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதில், 13,493 போ் வாக்குப் பதிவு செய்ய விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளனா். அவா்கள் தபால் மூலம் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.