மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

News image

பண்ணாரி அம்மன்  கோயிலுக்கு  மாவிளக்கு எடுத்து  ஊா்வலமாக வந்த பெண்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:58 pm

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சருகு மாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க மாவிளக்கு ஊா்வலம் புறப்பட்டு பண்ணாரி கோயிலுக்கு வந்தது.

இந்த ஊா்வலத்தில் சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், இக்கரை நெகமம்புதூா், அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். கோயில் முன் வைக்கப்பட்ட மாவிளக்கு தட்டுகளில் இருந்த பூஜை பொருள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமையும் (ஏப்ரல் 2), தங்கரத புறப்பாடு வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது