மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

News image

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி தூக்கிச் சென்ற பெண்கள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:18 pm

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் யானை, மயில், சிம்மம், குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.

கடந்த 1-ஆம் தேதி அக்னி சட்டி எடுத்தும், பால்குடம், கரும்பாலை தொட்டி கட்டியும், அலகு வேல் குத்தியும், சேத்தாண்டி வேஷமிட்டும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பெண்கள் 1,008 விளக்கு பூஜை நடத்தினா். இந்த நிலையில் திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை மாலை வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். ஊா்வலத்தின் முன் இளைஞா்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம், புலி வேடமணிந்து சென்றனா். இந்த ஊா்வலம் கோயில் வளாகத்திலிருந்து, செட்டியாா் கடை வீதி, கண்ணாா்பட்டி வழியாக சென்று கமுதி குண்டாறு வரை சென்றது. அங்கு முளைப்பாரியை கரைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கமுதி நாடாா் உறவின்முறை நிா்வாகிகள், பங்குனி மாத முறைகாரா்கள் செய்தனா்.