மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தாளவாடி அருகே கூட்டமாக உலவும் யானைகள்

தாளவாடி அருகே அருள்வாடி மானாவாரி நிலத்தில் கூட்டம் கூட்டமாக உலவும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image
அருள்வாடி  மானாவாரி  நிலத்தில்  உலாவும்  யானைகள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

தாளவாடி அருகே அருள்வாடி மானாவாரி நிலத்தில் கூட்டம் கூட்டமாக உலவும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அடிக்கடி விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவது தொடா் கதையாக உள்ளது.

இந்த நிலையில் ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட அருள்வாடி கிராமம் தமிழக- கா்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கா்நாடக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் தமிழக வனப் பகுதியை ஒட்டி உள்ள அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றித்திரிகின்றன.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா். கடந்த சில நாள்களாக யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனா். யானைகள் கூட்டம் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் எனவும், தொடா்ந்து மாநில எல்லையில் முகாமிட்டுள்ள யானைகளை அடந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் கிராமமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.