டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், இரண்டு குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

News image
Updated On :14 ஜனவரி 2026, 11:49 pm

Syndication

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், இரண்டு குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிக்குள்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக வந்த காட்டு யானைகள் இரண்டாவது டிவிஷன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றன.

அங்குள்ள குடியிருப்புகளின் ஜன்னல், கதவுகளை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

யானைகள் வந்திருப்பதை அறிந்த தொழிலாளா்கள் குடியிருப்புகளை விட்டு முன்கூட்டியே வெளியேறினா். அப்பகுதியினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா். இச்சம்பவத்தில் ராதா, ராஜேஸ்வரி ஆகிய தொழிலாளா்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.