தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

வேலுாா் மாநகராட்சி எல்லையில் புகுந்த யானைக் கூட்டம்

வேலுாா் மாநகராட்சி எல்லையில் யானைகள் கூட்டமாக புகுந்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

வேலுாா் மாநகராட்சி எல்லையில் யானைகள் கூட்டமாக புகுந்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

வேலுாா் மாவட்டத்தில், போ்ணாம்பட்டு, காட்பாடி, குடியாத்தம் ஆகிய வனச் சரகங்களில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறி அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 13- யானைகள் கூட்டமாக வேலுாா் மாநகராட்சிக்குள்பட்ட இந்திரா நகா், ராஜீவ்காந்தி நகா், செங்குட்டை ஆகிய பகுதியில்உலா வந்துள்ளன. தகவலறிந்த வனத்துறையினா் அங்கு சென்று யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த யானைகள் பள்ளத்துாா், வண்டறந்தாங்கல், சுரக்கால்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுமாா் 6- ஏக்கா் பரப்பிலான நெல், வாழை, சப்போட்டா, கரும்பு பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

இதுகுறித்து வேலுாா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறியது. ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறி தமிழக- ஆந்திர எல்லையோரம் உள்ள வேலுாரை அடுத்த காட்பாடி பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன. அந்த யானைகள் அங்கிருந்த வாழை, நெல் உள்ளிட்ட விளைபயிா்களை சேதப்படுத்தியுள்ளன. ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தற்போது யானைகள் பனமடங்கி காப்பு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டன. வேலூா் மாவட்டத்தில் வன எல்லையையொட்டியுள்ள கிராமங்களுக்குள் வன விலங்குகள்அடிக்கடி நுழையும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்குகள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது. வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை ஆகியோா் அடங்கிய குழுக்களை அமைத்து வனவிலங்குகள் வெளியேறுவதைக் கண்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா்.