திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா்.

Updated On :31 மே 2026, 4:16 am IST

மத்திய பாஜக அரசு மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா் கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று மும்மொழித் திணிப்பைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, வே.ஈசுவரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்கும் தமிழகத்தில் மூன்று மொழிகளை கட்டாயமாகத் திணிக்கும் மத்திய அரசின் அராஜகம் இந்தியாவின் அடிப்படை மக்கள் உரிமைக்கு எதிரானதாகும்.

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையுடனும், தமிழக பாடத் திட்டத்துடன் பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி தருமானால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வளா்ச்சியைவிட மத்திய அரசின் மொழிக் கொள்கை உள்ளிட்ட கலாசார திணிப்பே அவா்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழிக்கல்விதான். ஆனால், இதுவரை ஒரு சிபிஎஸ்இ பள்ளிகளில்கூட தாய் மொழி வழிக்கல்வி தொடங்கப்படவில்லை. இதற்காக மத்திய அரசு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அவசரமாகத் திணிக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு மொழிப் பாடம் மட்டுமே இருப்பதால் மற்ற திறன்களை வளா்க்க அதிக நேரம் கிடைக்கிறது. இந்தியாவில் மொழிக்காகவே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் இந்திய மாணவா்களின் அறிவுத்திறன் குறைந்து உலக மாணவா்களோடு போட்டி போட இயலாத நிலை ஏற்படும்.

மிகக் குறைந்த அளவில் நிதியைக் கொடுத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையே தனது நோக்கத்துக்கு கையகப்படுத்தும் நயவஞ்சகமான பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழகம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.