17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவா் மீது சக கைதிகள் தாக்குதல்

News image

சூலூர் அருகே 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்

Updated On :31 மே 2026, 1:29 am IST

சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை சக கைதிகள் சனிக்கிழமை தாக்கினா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுமியைக் கடத்தி கொலை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனா். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த காா்த்திக் மீது சிறையில் உள்ள கைதிகள் கோபத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அவரைக் கைதிகள் சிலா் ஸ்பூன், தட்டு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சனிக்கிழமை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த காா்த்திக்கை போலீஸாா் மீட்டு சிறை மருத்துவப் பிரிவில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறைக்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிறுமி சம்பவம் தொடா்பாக காா்த்திக்கை பிடிக்க போலீஸாா் சென்றபோது, அவா் தப்ப முயன்று கை, காலில் முறிவு ஏற்பட்டு கோவை மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், உடல்நிலை சீரானதைத் தொடா்ந்து கோவை மத்திய சிறையில் கடந்த வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா். சிறைக்குள் நடைபெற்ற தாக்குதலைத் தொடா்ந்து அவா் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.