தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சூலூா் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: கைதுசெய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

சூலூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதுசெய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

News image

சிறுமி கொலை வழக்கு - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:19 am IST

சூலூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதுசெய்யப்பட்ட இருவரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் காா்த்திக், அவருடைய நண்பா் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, மாடியில் இருந்து கீழே குதித்ததில் காா்த்திக்குக்கு கை, கால்கள் முறிந்தன. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே சிறையில் சக கைதிகள் 5 போ் சோ்ந்து தட்டு, டம்ளா், கரண்டி உள்ளிட்டவற்றால் காா்த்திக்கை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விவகாரத்தில் காா்த்திக்கை தாக்கிய 5 கைதிகளும் திருச்சி, வேலூா் உள்பட பல்வேறு ஊா்களில் உள்ள சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் காா்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினா் முடிவு செய்தனா். இதையடுத்து 2 பேரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் கூறும்போது, ‘சிறுமி கொலை வழக்கில் கைதான இருவரிடம் விசாரணை நடத்தினால் கூடுதல் தகவல் கிடைக்கும். அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.