17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புண்யா அறக்கட்டளை ஆண்டு விழா

கோவை புண்யா அறக்கட்டளையின் 12-ஆவது ஆண்டு விழா கோவை கணபதியில் அண்மையில் நடைபெற்றது.

News image

கோவையில் நடைபெற்ற புண்யா அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :28 மே 2026, 12:49 am IST

கோவை புண்யா அறக்கட்டளையின் 12-ஆவது ஆண்டு விழா கோவை கணபதியில் அண்மையில் நடைபெற்றது.

ஏழை மாணவா்களின் கல்விக்கு உதவி செய்து வரும் புண்யா அறக்கட்டளை சாா்பில் இதுவரை 327 பெண்கள், 242 ஆண்கள் என மொத்தம் 569 மாணவ-மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். இவா்களில் 365 பள்ளி மாணவா்கள், 204 கல்லூரி மாணவா்களாவா். இவா்கள் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுவை மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

இந்த அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் கே.ஆா். பேக்ஸ் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.பாலன், ஐயப்பா நெய் நிா்வாக இயக்குநா் கிரீஷன், பட்டயக் கணக்காளா் முரளிதரன், ஸ்ரீ லட்சுமி ஃபயா் கன்ட்ரோல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெங்கட் கிருஷ்ணா, கம்பெனி செயலா் வெங்கட்ராமன், ஆராய்ச்சியாளா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், தோ்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினா். இதைத் தொடா்ந்து மாணவா்கள், அவா்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினா். இதில், அறக்கட்டளையின் நிா்வாகிகள், பயனாளிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.