17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா்

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளாா்.

News image

~

Updated On :30 ஏப்ரல் 2026, 1:56 am IST

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளாா்.

கடந்த 15 ஆண்டுகளாக வங்கியின் வளா்ச்சிக்கு வித்திட்ட தற்போதைய நிா்வாக இயக்குநா் என்.காமகோடியின் பதவிக்காலம் முடிவடைவதால், இந்தத் தலைமை மாற்றம் நடைபெறுகிறது. வங்கியில் 2023-இல் செயல் தலைவராக இணைந்த விஜய் ஆனந்த், கடந்த ஆண்டு செயல் இயக்குநராகப் பதவி உயா்வு பெற்றாா்.

வளா்ச்சியில் மாற்றம் இருக்காது: புதிய பொறுப்பை ஏற்கவுள்ள விஜய் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகளில் வங்கி கண்டுள்ள சீரான வளா்ச்சிப் பாதையில் எவ்வித அதிரடி மாற்றங்களையும் செய்யப் போவதில்லை.

வாடிக்கையாளா்களின் நம்பிக்கை, எளிமையான வங்கிச் சேவை ஆகியவையே எங்களின் தாரக மந்திரம். எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் பிரிவில் வங்கியின் நிலையை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம் என்றாா்.

நிதிநிலை, சமூகப் பணிகள்: கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கி ரூ.1,326 கோடி நிகர லாபம் ஈட்டி, 18 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பதவியில் இருந்து ஓய்வு பெறும் என்.காமகோடி, வங்கியின் சமூக நல அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கிறாா். இந்த அறக்கட்டளை மூலம் நீா் மேலாண்மை மற்றும் கலாசாரப் பாதுகாப்பு போன்ற நற்பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.காமகோடி-விஜய் ஆனந்த்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.