17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்பிஐ கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது

எஸ்பிஐ கடன் மோசடி மூலம், ரூ.2,929.05 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் அமிதாப் ஜுன்ஜுன்வாலா கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:13 am IST

பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கடன் மோசடி மூலம், ரூ.2,929.05 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் அமிதாப் ஜுன்ஜுன்வாலாவை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மூலம், பல கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. செயல்படாத போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கெனவே அமிதாப் ஜுன்ஜுன்வாலாவை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத்தொடா்ந்து அவா் நீதிமன்றக் காவலில் தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கடன் மோசடி மூலம், ரூ.2,929.05 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடா்பாக, மும்பை நீதிமன்றத்தில் அமிதாப் ஜுன்ஜுன்வாலாவை ஆஜா்படுத்த தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அதன் பின்னா் அவரை சிபிஐ முறைப்படி கைது செய்யப்பட்டாா். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அங்குள்ள மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

அவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கும் மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது என்று சிபிஐ செய்தித்தொடா்பாளரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.