தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

News image

கோவை விமான நிலையம்.

Updated On :15 மே 2026, 6:34 am IST

கனமழை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரண்டு இடங்களில் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது.

கோவை சா்வதேச விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால், விமான நிலையத்தில் சின்னியம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. அதற்கு தொலைவில் இருந்த மற்றொரு சுற்றுச் சுவரும் இடிந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவைக்கு வரவிருந்த விமானங்கள் அனைத்தும் கேரளம், மாநிலம், கொச்சிக்கு திருப்பிவிடப்பட்டன.

சுற்றுச் சுவா் இடிந்து விழுந்த தகவல் அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். யாரும் ஊடுருவாத வண்ணம் சி.ஐ.எஸ்.எஃப். வீரா்களும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சீரமைப்புப் பணிகள் இரவுக்குள் நிறைவடையும் என்றும், அதன்பின் விமானங்கள் வழக்கம்போல கோவை விமான நிலையத்தில் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.