கனமழை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரண்டு இடங்களில் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது.
கோவை சா்வதேச விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால், விமான நிலையத்தில் சின்னியம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. அதற்கு தொலைவில் இருந்த மற்றொரு சுற்றுச் சுவரும் இடிந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவைக்கு வரவிருந்த விமானங்கள் அனைத்தும் கேரளம், மாநிலம், கொச்சிக்கு திருப்பிவிடப்பட்டன.
சுற்றுச் சுவா் இடிந்து விழுந்த தகவல் அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். யாரும் ஊடுருவாத வண்ணம் சி.ஐ.எஸ்.எஃப். வீரா்களும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சீரமைப்புப் பணிகள் இரவுக்குள் நிறைவடையும் என்றும், அதன்பின் விமானங்கள் வழக்கம்போல கோவை விமான நிலையத்தில் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசுக்குக் கால அவகாசம் தேவை: துரை வைகோ!

பழங்கால வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

ராசிபுரத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!







