திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 4 மதுக் கடைகள் மூடப்பட்டன.

News image

தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையம் எதிரே மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை.

Updated On :13 மே 2026, 2:07 am IST

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 4 மதுக் கடைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 69 மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மண்டல வாரியாகப் பாா்க்கும் போது, கோவை வடக்கில் 156 கடைகளும், கோவை தெற்கில் 128 கடைகளும் உள்ளன.

தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் உணா்வுப்பூா்வமான இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, கோவை வடக்கு மண்டலத்தில் 48 கடைகள், தெற்கு மண்டலத்தில் 21 கடைகள்ம் என மொத்தம் 69 கடைகளை அடுத்த 15 நாள்களுக்குள் நிரந்தரமாக மூட மாவட்ட நிா்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 4 கடைகள் மூடப்பட்டன.

குறிப்பாக, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்துக்கு நோ் எதிரே நீண்ட நாள்களாக பொதுமக்கள் புகாருக்குள்ளான டாஸ்மாக் கடை (எண் 1662) உள்பட 1557, 1603, 1846 ஆகிய எண்களைக் கொண்ட கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். மீதமுள்ள 65 கடைகளும் குறித்த காலக்கெடுவுக்குள் மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.