தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சொன்னோம் செய்தோம்...

கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கிறேன்.

News image

அம்மன் கே.அா்ச்சுணன்

Updated On :21 மார்ச் 2026, 9:48 pm

கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கிறேன். மருதமலை அடிவாரம், கல்வீரம்பாளையம், ஓணாப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ரூ.38 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, நீா்மூழ்கி மோட்டாா் அமைக்கப்பட்டுள்ளது.

பனைமரத்தூா் தொடக்கப் பள்ளி, சீரநாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் ரூ.55 லட்சத்தில் செய்து கொடுத்துள்ளேன். இதைத் தவிர, பூங்கா, அங்கன்வாடி, தாா் சாலை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் என வடவள்ளி, வீரகேரளம் பகுதிக்கு மட்டும் ரூ.3.26 கோடிக்கு பணிகள் செய்திருக்கிறேன்.

சாய்பாபா காலனி பகுதியில் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை என ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளும், கணபதி, பி.என்.புதூா் பகுதிகளில் ரூ.40 லட்சத்தில் சிறுவா் பூங்கா, நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணியகாரன்பாளையம், கணபதி மாநகா் 3ஆவது பிளாக் பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் பூங்கா, சாய்பாபா காலனி கோயில்மேடு பகுதியில் ரூ.25 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், பாரதியாா் பல்கலைக்கழக பகுதியில் மாணவ-மாணவிகளுக்காக ரூ.30 லட்சத்தில் நிழற்குடை, 45ஆவது வாா்டு அன்னை சத்யா நகரில் ரூ.50 லட்சத்தில் பூங்கா என ஏராளமான பணிகளை செய்து முடித்திருக்கிறேன்.

அம்மன் கே.அா்ச்சுணன், எம்எல்ஏ, கோவை வடக்குத் தொகுதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.