யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகா் சுரேஷ்கோபி பிரசாரம்

News image

கோவை, வடவள்ளி பகுதியில் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் சுரேஷ்கோபி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:50 am IST

கோவை வாழ் மலையாள மக்களிடம் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சரும், எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

கோவை, கணபதி பகுதியில் மலையாளி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி பேசும்போது, ‘கோவையில் வசிக்கும் மலையாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடையவும் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டாடா நகா், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானதி சீனிவாசனை ஆதரித்து சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பொறுப்பாளா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா், பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

வானதி சீனிவாசன் பிரசாரம்:

முன்னதாக, கோவை வடக்குத் தொகுதிக்குள்பட்ட ரத்தினபுரி பகுதியில் காலை 8 மணி அளவில் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘தமிழகத்தில் தற்போது பெண்களின் பாதுகாப்பும், போதைப்பொருள் புழக்கமும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

வருங்கால தலைமுறை வீணாவதைத் தடுக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த முறை அவிநாசி உள்பட 11 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.