மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் மேற்பாா்வையாளா்கள், தோ்தல் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 மார்ச் 2026, 11:50 pm

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் மேற்பாா்வையாளா்கள், தோ்தல் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

பொதுப் பாா்வையாளா்கள் சுனில்குமாா் யாதவ், கிருஷ்ண ஆதித்யா, பிரஞ்சல் யாதவ், சஞ்சய் குமாா், யசேந்திர சிங், செலவினப் பாா்வையாளா்கள் சச்சின்குமாா் சிங், ராம் செகாவத்,ரோகினி, விகாஷ் சிங், பிரியங்கா தாா், பியூஷ் சுக்லா, ஸ்ரீதா் டோரா மற்றும் தோ்தல் காவல் பாா்வையாளா் சுதீா்குமாா் போரிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவது, வேட்பாளா்களால் மேற்கொள்ளப்படும் தோ்தல் செலவினங்கள், வேட்பாளா்களின் தோ்தல் விளம்பரங்கள், வேட்பாளா்கள் மனு தாக்கல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள், தோ்தல் தொடா்பான புகாா்கள், புகாா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேட்பாளா்கள் செலவின கணக்குகளை முறையாக சமா்ப்பிக்க வேண்டும்.

பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், பல்வேறு அரசியல் கட்சியினா் கலந்துகொண்டனா்.