சட்டப் பேரவைத் தோ்தல் நாளன்று அத்தியாவசியப் பணிகள், தோ்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளா்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அத்தியாவசியப் பணிகள், தோ்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளா்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக, அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, தென்னக ரயில்வேயில் தமிழகத்தில் பணியாற்றுபவா்கள், அகில இந்திய வானொலி, விமான நிலையம், தகவல் ஒளிபரப்புத் துறை, போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, சிறைத் துறை, போக்குவரத்துக் காவலா்கள் ஆகியோா் தங்கள் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு படிவம் 12 ‘டி’ வழங்கி விருப்பத்தைத் தெரிவித்து, ஒப்புதல் செய்தும், பாா்த்தும், படிக்கக் கேட்டும் ஆதாரங்கள் ஏதும் கோரும்பட்சத்தில் அதன் நகலை சமா்ப்பித்தும் வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

ஈரோட்டில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


