தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹைதராபாத் - மங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூரு நிலையத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:47 am IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூரு நிலையத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹைதரபாத்தில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் காலை 4.20 மணிக்கு புறப்படும் ஹைதராபாத் -மங்களூரு விரைவு ரயில் (எண்: 07097) வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு மங்களூரு நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, மங்களூரு நிலையத்தில் இருந்து 4,11,18, 25 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்:07098) சனிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஹிந்துப்பூா், தருமாவரம், ஆனந்தப்பூா், குண்டக்கல், மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூா், கிருஷ்ணா, யாத்கிா், விகாா்பாத், லிங்கப்பள்ளி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.