டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு: ஜி.கே.வாசன்

News image
ஜி.கே.வாசன்
Updated On :14 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கோவை நீலாம்பூா் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தோ்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் கலந்து கொண்டாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் வெறுப்புணா்வுடன் உள்ளனா். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே இலக்காக இருக்க வேண்டும்.

பல்வேறு திட்டங்களுக்கு நிதி இல்லை என சொன்ன திமுக, தோ்தல் ஜுரம் காரணமாக பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரத்தைச் செலுத்தியுள்ளது. இது ஏமாற்றும் செயல் என்றாலும், இவா்களது உள்நோக்கத்தை வாக்காளா்கள் புரிந்து கொள்வாா்கள்.

அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை. கோவையில் 3 மாதங்களாகியும் மின்சார தத்கலுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, கோவை மாநகராட்சியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.