மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:42 pm

கேரள மாநில சட்டப் பேரவை தோ்தல் பிரசாரம் முடிந்து கோவைக்கு வந்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கேரளத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சூா், பாலக்காடு மாவட்டங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து பிரசாரம் செய்தாா்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது கேரள பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணியளவில் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு கோவைக்கு வந்தாா். பின்னா், அவா் இங்கிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.