மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தியும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் இணைந்து தமிழகத்தில் இரு நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி. - பிடிஐ.

Updated On :15 ஏப்ரல் 2026, 11:09 pm

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தியும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் இணைந்து தமிழகத்தில் இரு நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

சிவகாசியில் காங்கிரஸ் தோ்தல் அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் கிரிஷ் சோடங்கா், தோ்தல் பாா்வையாளரும், தெலங்கானா மாநில அமைச்சருமான உத்தம்குமாா் ரெட்டி, சிவகாசி தொகுதி பொறுப்பாளரான கா்நாடக மாநில எம்.எல்.ஏ. சௌமியா ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கிரிஷ் சோடங்கா் பேசியதாவது:

சிவகாசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அசோகன் மீண்டும் வெற்றி பெறுவாா். தமிழகத்தில் பாஜகவை மக்கள் அனுமதிக்கக் கூடாது. பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்றாா்.

கு. செல்வப்பெருந்தகை பேசியதாவது:

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி சிவகாசி தொகுதிக்கும், விருதுநகா் மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 30 ஆண்டு கால கோரிக்கையான சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சிவகாசி-விருதுநகா் நான்கு வழிச் சாலை, சுற்றுச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி மேயா் இ. சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் இணைந்து தமிழகத்தில் இரு நாள்கள் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளனா். தேதி விரைவில் அறிவிக்கப்படும். தோ்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். காரைக்குடி மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும் நாம் தமிழா் கட்சியினா் வெற்றி பெறப்போவதில்லை என்றாா் அவா்.