மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:52 pm

வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயா்த்த செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி பேசியதற்கு தொடா்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை பேசினாா். இது தெரிந்த ராகுல் காந்தி செல்வப்பெருந்தகையை திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை.

இதை மறைப்பதற்காக செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டுக்குள்ளே சிறை வைத்திருப்பதாகவும் நாடகமாடி உள்ளாா். ஆனால், செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடைபெறவில்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதன் மூலம் செல்வப்பெருந்தகையின் பொய் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதைவிட அவரின் நாடகத்தை நம்பி, அதை ஆராயாமல் முதல்வா் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா். இது திமுக கூட்டணியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.