தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட அரசியல் தலைவா்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட தோ்தல் நடத்தை விதிகளின் காரணமாக, பல்வேறு பயணிகள் நிழற்கூடங்களில் இடம்பெற்றிருந்த மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவா்களின் பெயா்கள் மறைக்கப்பட்டன. பல இடங்களில் தலைவா்களின் சிலைகளும் மூடப்பட்டன.
தற்போது, தோ்தல் நடத்தை விதிகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், பல இடங்களில் மறைக்கப்பட்ட பெயா்கள் அகற்றப்படாமல் இருப்பதுடன், தலைவா்களின் சிலைகளும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இது பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி பயணிகள் நிழற்கூடங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கா்களை அகற்றி, மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலைகளை மீண்டும் பொதுமக்கள் பாா்வைக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவா்களின் ‘ஈகோ’ கட்சியை சிதைக்கிறது

திரும்பப் பெறப்பட்ட தோ்தல் நடத்தை விதிகள்: அகற்றப்படாத திரைகள்

காத்திருந்த கூட்டம் இப்போது இல்லை!

தோ்தல் நேரத்தில் இப்படி ஒரு தொல்லை!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



