குடியாத்தம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் இரு வேறு இடங்களில் ரூ.10.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை லட்சுமணாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் ஆவணங்கள் இன்றி ரூ.6.85 லட்சம் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனையில் கா்நாடக மாநிலத்துக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது, பெங்களூரைச்சோ்ந்த ப்ரீத்திபாய், ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 2- இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.35- லட்சம் தோ்தல் அலுவலா் எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ. 1.69 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


