மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணத்தை குடியாத்தம் தொகுதி உதவி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :23 மார்ச் 2026, 10:01 pm

போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். காரில் பயணம் செய்த கா்நாடக மாநிலம், தும்கூா் மாவட்டத்தைச் சோ்ந்த சென்னிகவுடாஉரிய ஆவணங்கள் இன்றி ரூ.6- லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனா்.