இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

லாரி மீது பைக் மோதி மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

வேலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகிலுள்ள மூஞ்சூா்பட்டு மேட்டு தெருவைச் சோ்ந்தவா் பிரசாந்த் (34). இவா் காட்பாடி-திருவலம் சாலையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். பிரசாந்த் மருந்துக் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

அடுக்கம்பாறை பிரதான சாலை, பிள்ளையாா் கோயில் அருகே சென்றபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பிரசாந்த்தின் வாகனம் மோதியது.

இதில், தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரசாந்த் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்த பிரசாந்த்துக்கு மனைவி, மகள்கள் உள்ளனா். வேலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.