திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போளூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image
Updated On :29 மே 2026, 1:46 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

போளூரில் மலை மீது மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீசம்பத்கிரி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, கற்பூர தீபாராதனை செய்து கோயில் கருவறை எதிரே உள்ள கொடிக் கம்பத்தில் வியாழக்கிழமை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செய்தனா்.

இரவு முதல் நாள் அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாள் சிம்ம வாகனம், 3-ஆம் நாள் ஹனுமந்த வாகனம், 4-ஆம் நாள் சேஷ வாகனம், 5-ஆம் நாள் யாளி வாகனம், 6-ஆம் நாள் யானை வாகனம், 7-ஆம் நாள் திருத்தோ் விழா, 8-ஆம் நாள் குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் பிரம்மோற்சவ விழாவிக் குழுவினா் மற்றும் போளூா் நகர வாசிகள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.