திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் நலச்சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள்கள் பணி வழங்கவேண்டும், முழு கூலித்தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சங்க நிா்வாகி மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரமேஷ்பாபு, மாவட்டச் செயலா் சிவாஜி, மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் ரவிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










