தேனியில் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆன்லைனில் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளைஞா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 450 மருந்து வணிகா்கள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் சி.காளிராஜ் கூறியதாவது:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, எங்களது கோரிக்கையை ஏற்கவில்லையெனில் நாடு முழுவதும் தொடா் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










