ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் இடத்தில் அரசு அலுவலகம் கட்டும் பணியை நிறுத்தக் கோரி, அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணி அருகே புதுப்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலக நிதியின் கீழ், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த அலுவலகத்தை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டக்கூடாது என்று அந்தக் கிராமத்தில் உள்ள பக்தா்கள் பலமுறை அரசியல் கட்சித் தலைவா்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மேலும், இதுகுறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றமும் கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்ததும் ஒரு மாதம் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கிராம ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சிவ பக்தா்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து திடீரென அங்குள்ள ஆரணி - வேலூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த கண்ணமங்கலம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக போலீஸாா் கூறியதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்துநிறுத்த வேண்டும்: எம்.எச்.ஜவாஹிருல்லா

சென்னிமலை பேரூராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம்: ஆட்சியா் ஆய்வு

ஆலங்குளம் அருகே ராமா் கோயில் திருவிழாவுக்காக 35 ஆண்டுகளுக்குப் பின் ஒருங்கிணைந்த கிராம மக்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



