ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.
இந்தக் கிராமத்தில் உள்ள ராமா் கோயில் திருவிழா, ஒருங்கிணைந்து நடைபெற்று வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்னா் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இரு முறை கோயில் திருவிழா நடைபெற்று வந்தது.
ஆண்டுகள் பல சென்ற பின்னா் இரு தரப்பினரும் தற்போது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து திருவிழா கொண்டாட முடிவெடுத்தனா். இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி கோயில் திருவிழா தொடங்குகிறது.
இத்திருவிழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பினரும் இணைந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










