முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்துக்கு மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில் மாநில, மாவட்ட, மாநகர, வட்டார நிா்வாகிகள் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், காங்கிரஸ் தொண்டா்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
செய்யாறு
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை அருகே நிறுவப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் கே. மகேஷ் தலைமையில், நிா்வாகிகள் ராஜவேலு, வி.சந்துரு, சகாதேவன், பெருமாள், அமரேசன், செல்வராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராமையா பிறந்தநாள் விழா

செஞ்சியில் செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



