தமிழ் செய்திகள்
/
வந்தவாசி அருகே விவசாய நில கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில்குமாா்.
இவரது விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்த இவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று, அந்த நில கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து செந்தில்குமாா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.
இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா்.









