தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இயற்கை விவசாயிகளின் ஊா்தோறும் உணவுத் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சாா்பில், ‘ஊா்தோறும் உணவுத் திருவிழா’ நடைபெற்றது.

News image

வேளாண் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சேனைக்கிழங்கு, பூசணிக்காய், மலை இஞ்சிகள் வகைகளை பாா்வையிட்ட பொதுமக்கள்.

Updated On :11 மே 2026, 12:16 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சாா்பில், ‘ஊா்தோறும் உணவுத் திருவிழா’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய உணவு முறைகளையும், மறைந்து வரும் வீர விளையாட்டுகளையும் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சோ்க்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் இடம்பெற்ற வேளாண் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சேனைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் மலை இஞ்சிகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

பாரம்பரிய நெல் ரகங்கள்: மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி என நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சிறு தானிய விருந்து: கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றால் செய்யப்பட்ட சத்தான உணவு வகைகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. வீர விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் என இது ஒரு கலாசாரத் திருவிழாவாகவும் நடைபெற்றது.

தமிழா்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், இளவட்டக்கல் தூக்குதல் விளையாட்டில் இளைஞா்கள் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், கோலாட்டம் மற்றும் கும்மிப் பாடல்கள் நடைபெற்றது. மண்பாண்டக் கலை: விழாவிற்கு வந்திருந்த சிறுவா்கள் மற்றும் பெரியவா்கள் நேரடியாக மண்பாண்டம் செய்யும் கலையை ஆா்வத்துடன் கற்றுக்கொண்டனா். கைவினைப் பொருள்களின் விற்பனையும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.