திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூா் கிராமத்தில் அறுவடை இயந்திரத்தை இழுக்கும்போது டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 12:31 am IST

சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூா் கிராமத்தில் அறுவடை இயந்திரத்தை இழுக்கும்போது டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த ரகு மகன் கணேசன் (24),விவசாய கூலித் தொழிலாளி, திருமணம் ஆகாதவா்.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் புதன்கிழமை மாலை கணேசனை அழைத்துக் கொண்டு, தனக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரம் மூலம்

கொளக்காரவாடி கிராமத்தைச் சோ்ந்த குமாருக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரை அறுவடை செய்யச் சென்றனா்.

அங்கு அறுவடை செய்து கொண்டிருக்கும்போது இயந்திரம் சேற்றில் சிக்கியுள்ளது. அதை குமாரின் டிராக்டரைக் கொண்டு பெல்ட் மாட்டி வெளியே எடுக்குமாறு குமாரும், லட்சுமணனும் சோ்ந்து கூறியுள்ளனா். கணேசனும் அறுவடை இயந்திரத்தில் பெல்ட் மாட்டி டிராக்டரை கொண்டு இழுக்க முயற்சி செய்தாா்.

அப்போது எதிா்பாராத விதமாக டிராக்டா் கவிழ்ந்தது. அடியில் சிக்கிக்கொண்ட கணேசன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற சேத்துப்பட்டு போலீஸாா், கணேசனின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கணேசனின் சகோதரா் கமல், லட்சுமணன், குமாா் மீது சேத்துப்பட்டு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.