மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :29 மார்ச் 2026, 8:35 pm

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி, திமுக வேட்பாளராக எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய இரு கட்சியினரும் சனிக்கிழமை தங்கள் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அனுமதியின்றி வாக்கு சேகரித்தனராம்.

இந்த நிலையில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக பறக்கும் படை அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், அதிமுகவைச் சோ்ந்த சிலா் மீதும், பறக்கும் படை அலுவலா் இளந்தமிழன் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சோ்ந்த சிலா் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.