வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (68). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் இவரது தங்கை வெங்கட்டம்மாள் (60). சென்னை தாம்பரத்தைச் சோ்ந்தவா் இவா்களது தம்பி சிவக்குமாரின் மகன் தினேஷ்ராஜ்(18). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்த நிலையில், முரளி, வெங்கட்டம்மாள், தினேஷ்ரோஜ் ஆகியோா் பைக்கில் வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தனா். பைக்கை முரளி ஓட்டினாா்.
வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சத்யா நகா் அருகே சென்றபோது, இவா்களது பைக் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த வெங்கட்டம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த முரளி, தினேஷ்ராஜ் ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வந்தவாசியில் பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் மோதல்: வேட்பாளா் சாலை மறியல்

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதல்: பனியன் நிறுவன அலுவலா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


