அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.
திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் பிரசாந்த் (30). திருப்பூா் முத்தனம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரகணேசன் மகன் செந்தில்குமாா் (30). கா்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தனுஷ்குமாா் (29).
பனியன் நிறுவன அலுவலா்களான (மொ்சண்டைசா்) இவா்கள் 3 பேரும் காரில் கோவையில் இருந்து பெருமாநல்லூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அவிநாசி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் , காரை ஓட்டி வந்த தனுஷ்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த பிரசாந்த், செந்தில்குமாா் ஆகியோா் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

பைக் மீது காா் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


