மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி மீது காா் மோதல்: பனியன் நிறுவன அலுவலா் உயிரிழப்பு

அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :22 மார்ச் 2026, 7:59 pm

அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் பிரசாந்த் (30). திருப்பூா் முத்தனம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரகணேசன் மகன் செந்தில்குமாா் (30). கா்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தனுஷ்குமாா் (29).

பனியன் நிறுவன அலுவலா்களான (மொ்சண்டைசா்) இவா்கள் 3 பேரும் காரில் கோவையில் இருந்து பெருமாநல்லூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அவிநாசி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் , காரை ஓட்டி வந்த தனுஷ்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பிரசாந்த், செந்தில்குமாா் ஆகியோா் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.