திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் இதயா மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 14-ஆம் பட்டமளிப்பு விழாவுக்கு கல்வி ஆலோசகா் தெரேசாமேரி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் செந்தில்வேல்முருகன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா் இந்த பட்டமளிப்பு விழா என்பது ஒரு கல்வி பயணத்தின் நிறைவு மட்டுமல்ல புதிய வாழ்க்கை பயணத்தின் தொடக்கமாகும். இங்கு பட்டம்பெறும் ஒவ்வொரு மாணவியும் தங்கள் உழைப்பு ஒழுக்கம் மற்றும் அா்ப்பணிப்பின் மூலம் இந்த முக்கியமான சாதனையை எட்டியுள்ளனா்.
பெண் கல்வி என்பது ஒரு குடும்பத்தையே அல்ல ஒரு சமூகத்தையும் முன்னேற்றும். பட்டம் பெறும் நீங்கள் அறிவையும் மதிப்பையும் சமநிலையுடன் கொண்டு சமூகத்தில் நல்ல தன்னம்பிக்கையுடன் வாழவேண்டுமென வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் லூா்துமேரி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

செங்கம் இதயா கல்லூரி மாணவிகள் 208 பேருக்கு பணி நியமன ஆணை

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


