லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள் பறிமுதல்

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறக்கும்படையினா் மேற்கொண்ட வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கத்தை அடுத்த கோணாங்குட்டை பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் 30-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில மதுப்புட்டிகள் இருந்தன.

உடனடியாக மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் துணை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.