லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தருமபுரியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை சரிபாா்க்கும் தோ்தல் பறக்கும்படையினா்

Updated On :22 மார்ச் 2026, 8:25 pm

தருமபுரியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி, ஒட்டப்பட்டி அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய வாகனச் சோதனையில், ஜெகநாதன் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த காரில் ரூ. 5 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

அவற்றுக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா். சிட் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எடுத்துச் செல்வதாக ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்த பணத்தை, தருமபுரி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.