மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம்

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்க நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசு வழங்கிய தெள்ளாா் ரோட்டரி சங்க நிா்வாகி ஜி.ஆனந்த்.

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ‘இன்றைய சூழலில் அறிவியலின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் வெற்றிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியா் கண்ணன் வரவேற்றாா்.

தெள்ளாா் ரோட்டரி சங்க நிா்வாகி ஜி.ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். அப்போது, அறிவியலின் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.

அறிவியல் தின விநாடி வினா நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திரைப்பட கலை இயக்குநா் விஜய் ஆதிநாதன், கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ், சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் பாா்த்திபிரபு நன்றி கூறினாா்.