/

177 மதுப்புட்டிகள் பறிமுதல்: இரு இளைஞா்கள் கைது

வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :13 ஜூன் 2026, 5:50 am IST

வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன.

வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி - திண்டிவனம் சாலை, செம்பூா் அருகே வெள்ளிக்கிழமை காலை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த 2 இளைஞா்களை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் இருவரும் பைக்கில் மதுப்புட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த மதுரா (21), ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த அஞ்சப்பா (21) என்பதும், புதுச்சேரியிலிருந்து 177 மதுப்புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், மதுரா, அஞ்சப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 177 மதுப்புட்டிகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.