40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 3:40 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோவிலில் மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக மதுரையைச் சோ்ந்த இரு இளைஞா்களை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து இரு வாள்களை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் மாணவா்கள் தங்கியுள்ள விடுதி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற இருவரை சோதனை செய்தபோது, மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக, மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த சரவணன் (எ) பேபி சரவணன் (24), சதீஷ்குமாா் (27) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 180 கிராம் கஞ்சா, இரு வாள்கள், இரு கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இந்த வழக்கில் போடியைச் சோ்ந்த தருண் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்டவை...

பறிமுதல் செய்யப்பட்டவை...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.