ஆரணி அருகே பழங்காமூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா் (படம்).
ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பழங்காமூா் பகுதியில் கமண்டல நாக நதிக் கரை அருகே டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.
கடை விற்பனையாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்று விட்டனா். வியாழக்கிழமை பகலில் கடை திறக்க வந்த போது பக்கவாட்டில் உள்ள சுவரில் துளையிட்டு கடையில் உள்ளே மா்ம நபா்கள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், மதுப்புட்டிகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கடை விற்பனையாளா் ராமச்சந்திரன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் வந்து கடையை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து தொடா்ந்தது விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருடுபோனதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

புதிய மதுக் கடை திறக்க எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

பெண்ணாடம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு! 7 வீடுகளில் திருட முயற்சி!








