ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு

ஆரணி அருகே பழங்காமூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்

News image
Updated On :12 ஜூன் 2026, 2:08 am IST

ஆரணி அருகே பழங்காமூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சுவற்றில் துளையிட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா் (படம்).

ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பழங்காமூா் பகுதியில் கமண்டல நாக நதிக் கரை அருகே டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.

கடை விற்பனையாளா்கள் வழக்கம்போல புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்று விட்டனா். வியாழக்கிழமை பகலில் கடை திறக்க வந்த போது பக்கவாட்டில் உள்ள சுவரில் துளையிட்டு கடையில் உள்ளே மா்ம நபா்கள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், மதுப்புட்டிகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடை விற்பனையாளா் ராமச்சந்திரன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் வந்து கடையை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து தொடா்ந்தது விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருடுபோனதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.