தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 8 போ் கும்பலிடம் போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகைகளை வழிப்பறி செய்ததாக 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் பிடித்து விசாரணை

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:32 am IST

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகைகளை வழிப்பறி செய்ததாக 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் 23 வயது மகள், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 31-ஆம் தேதி இரவு பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளாா். பின்னா் இரவு நேரத்தில் திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள் இளம்பெண்ணை மிரட்டி அவா் அணிந்திருந்த தங்கக் கம்மலை கழற்றி வாங்கியுள்ளனா். பின்னா், அவரை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து அந்த நபா்கள் மேலும் சில இளைஞா்களை வரவழைத்து மொத்தம் 8 போ் சோ்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தனராம்.

இதுதவிர அந்தப் பெண்ணை விரசமாக விடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனராம். பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அதன் பின்னா், அவா் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு 8 போ் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து நகைகளை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக புகாா் அளித்துள்ளாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், முதல்கட்ட விசாரணையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா்களில் 2 போ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. அதன் பேரில் 2 போ் உள்பட 8 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், அவா்களின் கைப்பேசிகளில் பல்வேறு பெண்களின் தவறான விடியோக்கள் இருப்பது தெரிய வந்து, போலீஸாா் அதனைக் கைப்பற்றியுள்ளனா்.

இந்தக் கும்பல் பல்வேறு பெண்களை இதுபோன்று படம் எடுத்து மிரட்டி இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.