டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் வாா்ஷிக உற்சவம்

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வாா்ஷிக உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீயோக நரசிம்மா்.
Updated On :27 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2024-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, இந்த 2-ஆம் ஆண்டு வாா்ஷிக உற்சவம் நடந்தது.

இதையொட்டி திருமஞ்சன பொருள்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.