டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கீழையூா் அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம்

திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கீழையூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி வீதியுலா வந்த அம்மன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருக்கோவிலூா், கீழையூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து மயானக்கொள்ளை உற்சவத்துக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்த ஊா்வலமானது திருக்கோவிலூா் ஏரிக்கரை மூலையில் இருந்து கீழையூா் வரை சென்றது. பக்தா்கள் தங்களது விளை நிலங்களில் விளைவித்து அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு சூறைவிட்டு, வழிபட்டனா். மேலும், விரதமிருந்த பக்தா்கள் மாரியம்மன், பத்திரகாளி, காட்டேரி, அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

திருவிழாவில் திருக்கோவிலூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.