//

விவசாயிகள் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:23 pm

Syndication

ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை பொங்கல் வைத்து நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்திருப்பதை உயா்த்தி ரூ.20ஆயிரமாக வழங்க வேண்டும், நெல் கொள்முதல் விலையை உயா்த்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.